என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடுகிறார் பிரதமர் மோடி
Byமாலை மலர்25 July 2017 9:33 AM GMT (Updated: 25 July 2017 9:33 AM GMT)
குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் பார்வையிட உள்ளார்.
புதுடெல்லி:
ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆறுகளின் நீர் பல இடங்களில் ஊருக்குள் புகுந்துள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் பல இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்திலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, குஜராத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான நிலவரத்தை எடுத்துரைத்தார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளார். வடக்கு குஜராத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி ஓடுகிறது. நீர்நிலைகள் நிரம்பி வழிவதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ஆறுகளின் நீர் பல இடங்களில் ஊருக்குள் புகுந்துள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் பல இடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஆங்காங்கே மீட்பு படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
குஜராத் மாநிலத்திலும் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக வடக்கு குஜராத்தில் பதான், பனாஸ் கந்தா மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, இன்று காலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, குஜராத்தில் பெய்து வரும் தொடர் மழை மற்றும் வெள்ளம் தொடர்பான நிலவரத்தை எடுத்துரைத்தார்.
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குஜராத் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட உள்ளார். வடக்கு குஜராத்தில் வெள்ள பாதிப்பு பகுதிகளை அவர் பார்வையிட உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X