என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீட் தேர்வுக்கு விலக்கு: மத்திய மந்திரி நட்டாவிடம் திமுக எம்.பிக்கள் நேரில் மனு
Byமாலை மலர்24 July 2017 10:55 PM GMT (Updated: 24 July 2017 10:55 PM GMT)
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக எம்.பிக்கள் மத்திய சுகாதாரத் துறை மந்திரி நட்டாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
புதுடெல்லி:
திமுக எம்.பிக்கள் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டாவை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக எம்.பிக்கள் நட்டாவிடம் மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி மற்றும் திருச்சி சிவா ஆகிய திமுக மாநிலங்களவை எம்.பிக்கள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மனுவை பெற்றுக்கொண்ட நட்டா இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாளை முடிவு அறிவிக்கப்படும் என கூறியதாக தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து விலக்குப்பெற நடவடிக்கை எடுக்காமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே குறியாக இருப்பதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திமுக எம்.பிக்கள் நட்டாவை சந்தித்தனர். இதனிடையே நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
திமுக எம்.பிக்கள் மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டாவை நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி திமுக எம்.பிக்கள் நட்டாவிடம் மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது, டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி மற்றும் திருச்சி சிவா ஆகிய திமுக மாநிலங்களவை எம்.பிக்கள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, மனுவை பெற்றுக்கொண்ட நட்டா இது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாளை முடிவு அறிவிக்கப்படும் என கூறியதாக தெரிவித்தார்.
நீட் தேர்விலிருந்து விலக்குப்பெற நடவடிக்கை எடுக்காமல் தமிழக அமைச்சர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக்கொள்வதிலேயே குறியாக இருப்பதால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் திருச்சி சிவா குற்றம்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திமுக எம்.பிக்கள் நட்டாவை சந்தித்தனர். இதனிடையே நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களும் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரை சந்தித்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X