என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை ஜனாதிபதி வேட்பாளர் வெங்கையா நாயுடு மீது காங்கிரஸ் சரமாரி புகார்
Byமாலை மலர்24 July 2017 8:50 PM GMT (Updated: 24 July 2017 8:50 PM GMT)
பா.ஜனதா சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வெங்கையா நாயுடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பா.ஜனதா சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
“நெல்லூர் மாவட்டத்தில் ஏழைகளுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து கொண்டார். அவர்கள் எதிர்த்து போராடியதால் மீண்டும் நிலத்தை ஒப்படைத்தார். எதிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கூறும் வெங்கையா நாயுடு இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கவேண்டும். இதேபோல் அவருடைய மகன் மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி மகன் ஆகியோருக்கு சொந்தமான வாகன நிறுவனங்களுக்காக 2014-ம் ஆண்டு டெண்டர் விடாமல் மாநில அரசு 271 கோடி ரூபாய்க்கு வாங்க உத்தரவிட்டது பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வெங்கையா நாயுடு கூறும்போது, “இதற்கெல்லாம் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். நில விவகாரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த தேர்தலிலும் இந்த பிரச்சினைகளை எழுப்பினால், அதனால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் பா.ஜனதா சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
“நெல்லூர் மாவட்டத்தில் ஏழைகளுக்காக வழங்கப்பட்ட நிலத்தை அபகரித்து கொண்டார். அவர்கள் எதிர்த்து போராடியதால் மீண்டும் நிலத்தை ஒப்படைத்தார். எதிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கூறும் வெங்கையா நாயுடு இந்த முறைகேடு குறித்து விளக்கம் அளிக்கவேண்டும். இதேபோல் அவருடைய மகன் மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரி மகன் ஆகியோருக்கு சொந்தமான வாகன நிறுவனங்களுக்காக 2014-ம் ஆண்டு டெண்டர் விடாமல் மாநில அரசு 271 கோடி ரூபாய்க்கு வாங்க உத்தரவிட்டது பற்றியும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வெங்கையா நாயுடு கூறும்போது, “இதற்கெல்லாம் ஏற்கனவே பதில் கூறிவிட்டேன். நில விவகாரம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. எனவே இந்த தேர்தலிலும் இந்த பிரச்சினைகளை எழுப்பினால், அதனால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X