search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல் - பாகிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டான்
    X

    காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல் - பாகிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டான்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைக்கோட்டின் வழியாக இன்று இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதியை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள மச்சில் செக்டர் அருகே இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக இன்று அதிகாலை சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.

    அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதலில் நடத்தினர்.

    இருதரப்புக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகளில் ஒருவனை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
    Next Story
    ×