search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர்: ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாக்.ராணுவம் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் படுகாயம்
    X

    காஷ்மீர்: ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாக்.ராணுவம் துப்பாக்கிச் சூடு - இந்திய வீரர் படுகாயம்

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் இன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர் படுகாயமடைந்தார்.
    ஜம்மு:

    காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது இன்று அதிகாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டர் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியதாகவும், இந்திய வீரர்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருவதாகவும் ஜம்முவில் இருந்துவரும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தொடர்ந்து அங்கு நீடித்துவரும் துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஆர்.வி. யாதவ் என்ற வீரர் படுகாயம் அடைந்தார்.

    முன்னதாக, இதே மாவட்டத்தின் சுந்தர்பானி எல்லைக்கோட்டின் அருகேயுள்ள இந்திய முகாம்களின்மீது நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஜெயத்ரத் சிங் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திவரும் துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுவீச்சு தாக்குதலில் இந்த மாதத்தில் இதுவரை 9 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×