என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாகலாந்து சட்டசபையில் பலப்பரீட்சை: 47 வாக்குகள் பெற்று முதல்வர் ஜெலியாங் வெற்றி
Byமாலை மலர்21 July 2017 10:47 AM GMT (Updated: 21 July 2017 10:47 AM GMT)
நாகலாந்து சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 வாக்குகள் பெற்று முதல்வர் ஜெலியாங் வெற்றி பெற்றுள்ளார்.
கவுகாத்தி:
நாகலாந்தில் நிலவிவந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 19-ம் தேதி முதல்வராக ஜெலியாங்கிற்கு ஆளுநர் ஆச்சாரியா பதவிபிரமாணம் செய்து வைத்தார். வருகிற 22-ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.
அதைதொடர்ந்து, 60 எம்.எல்.ஏ.க்களை கொண்ட நாகலாந்து சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜெலியாங் 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. (4), நாகலாந்து மக்கள் முன்னணி (36), சுயேட்சைகள் (7) என மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம், ஜெலியாங் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X