என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க.வை வீழ்த்த 18 எதிர்க்கட்சிகளுடன் நாடு தழுவிய இயக்கம்: மம்தா அதிரடி அறிவிப்பு
Byமாலை மலர்21 July 2017 10:28 AM GMT (Updated: 21 July 2017 10:28 AM GMT)
மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா:
மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க. அரசு, மாநில அரசுகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுத்து வருவதாகவும், பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்தப்போவதாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா கூறியதாவது:-
மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. மத்திய அரசு, மாநிலத்தில் ஆளும் அரசுகளை சுதந்திரமாக செயல்பட அனுமதி மறுக்கின்றது.
மத்தியில் ஆட்சி செய்துவரும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக 18 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நாடு தழுவிய இயக்கம் நடத்த உள்ளோம்.
வருகிற ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் பா.ஜ.க.விற்கு எதிரான திட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X