என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்ட்: முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியது - காயமின்றி தப்பினார்
Byமாலை மலர்20 July 2017 6:50 AM GMT (Updated: 20 July 2017 6:50 AM GMT)
உத்தராகண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியதில், அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
டேராடூன்:
உத்தராகண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் ராஜ்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் செல்போனில் பேசியபடி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஹரிஷ் ராவத்மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய அவர், உடனே சமாளித்துக் கொண்டார். திடீரென நடந்த இந்த விபத்தில், ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார்.
முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியதை அறிந்து, அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். ஆனால், முதல்-மந்திரி தலையிட்டு சமாதானம் செய்ததன் பேரில், பைக்கில் வந்தவர் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார் என ஹரிஷ் ராவத்தின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் ராஜ்பூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகில் செல்போனில் பேசியபடி நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராத விதமாக தனது கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட ஹரிஷ் ராவத்மீது மோதியது.
இதில் நிலைதடுமாறிய அவர், உடனே சமாளித்துக் கொண்டார். திடீரென நடந்த இந்த விபத்தில், ஹரிஷ் ராவத் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி தப்பினார்.
முன்னாள் முதல்-மந்திரி மீது பைக் மோதியதை அறிந்து, அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். ஆனால், முதல்-மந்திரி தலையிட்டு சமாதானம் செய்ததன் பேரில், பைக்கில் வந்தவர் பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டார் என ஹரிஷ் ராவத்தின் செய்தி தொடர்பாளர் சுரேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X