என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கடலுக்கடியில் உலோகம்-கனிம புதையல்: புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்17 July 2017 11:48 AM GMT (Updated: 17 July 2017 11:48 AM GMT)
இந்தியாவை சுற்றி கடலுக்கடியில் விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் கனிமங்கள் ஏராளமாக இருப்பதை இந்திய புவியியல் ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.
கொல்கத்தா:
தீபகற்ப இந்தியாவில் கடலுக்கடியில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) ஆய்வு செய்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது மங்களூர், சென்னை, மன்னாள் பேசின், அந்தமான்-நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளை சுற்றி மிகப்பெரிய அளவில் கடல் வளங்கள் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டது.
ஆழமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தினால் கடலுக்கடியில் சுண்ணாம்பு மண், பாஸ்பேட் நிறைந்த மற்றும் சுண்ணாம்பு படிவுகள், ஹைட்ரோகார்பன், உலோக படிவுகள் என மிகப்பெரிய பொக்கிஷம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜிஎஸ்ஐ அதிகாரிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 181,025 சதுர கி.மீ. பரப்பளவில் 10 ஆயிரம் மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுண்ணாம்பு மண் இருப்பதை கண்டறிந்து அதுதொடர்பான தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
கர்வார், மங்களூர் மற்றும் சென்னை கடற்பகுதியில் பாஸ்பேட் படிவுகள், தமிழ்நாடு கரையோரத்தில் மன்னார் பேசின் நீரோட்ட அமைப்பில் எரிவாயு ஹைட்ரேட், அந்தமான் கடலில் பெரோ மாங்கனீஸ், லட்சத்தீவுகளைச் சுற்றி நுண்ணிய மாங்கனீசு படிமங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தீபகற்ப இந்தியாவில் கடலுக்கடியில் உள்ள தாதுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வளம் குறித்து இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) ஆய்வு செய்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்போது மங்களூர், சென்னை, மன்னாள் பேசின், அந்தமான்-நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகளை சுற்றி மிகப்பெரிய அளவில் கடல் வளங்கள் இருப்பது முதல் முறையாக கண்டறியப்பட்டது.
ஆழமான மற்றும் விரிவான ஆய்வு நடத்தினால் கடலுக்கடியில் சுண்ணாம்பு மண், பாஸ்பேட் நிறைந்த மற்றும் சுண்ணாம்பு படிவுகள், ஹைட்ரோகார்பன், உலோக படிவுகள் என மிகப்பெரிய பொக்கிஷம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜிஎஸ்ஐ அதிகாரிகள் 3 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் 181,025 சதுர கி.மீ. பரப்பளவில் 10 ஆயிரம் மில்லியன் டன்னுக்கும் அதிகமான சுண்ணாம்பு மண் இருப்பதை கண்டறிந்து அதுதொடர்பான தரவுகளை தற்போது வெளியிட்டுள்ளது.
கர்வார், மங்களூர் மற்றும் சென்னை கடற்பகுதியில் பாஸ்பேட் படிவுகள், தமிழ்நாடு கரையோரத்தில் மன்னார் பேசின் நீரோட்ட அமைப்பில் எரிவாயு ஹைட்ரேட், அந்தமான் கடலில் பெரோ மாங்கனீஸ், லட்சத்தீவுகளைச் சுற்றி நுண்ணிய மாங்கனீசு படிமங்கள் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X