என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை-சகோதரர் வெறிச்செயல்
Byமாலை மலர்17 July 2017 10:14 AM GMT (Updated: 17 July 2017 10:14 AM GMT)
பீகார் மாநிலம் காதிகார் மாவட்டத்தில் உள்ள சாண்டி என்ற கிராமத்தில் சொத்து தகராறில் மூன்று பெண்கள் உட்பட 4 பேரை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் காதிகார் மாவட்டம் சாண்டி கிராமத்தை சேர்ந்த கேதர்நாத் சிங்கிற்கும் அவருடைய சகோதரர் மனோஜ் சிங்கிற்கும் இடையே பரம்பரை சொத்தை விற்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சகோதரர்கள் இருவரும் நேற்று மாலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வந்து சமாதானம் செய்த பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்றுள்ளனர்.
இருப்பினும் மனோஜ், கேதர்நாத் மீது கோபத்துடன் இருந்துள்ளார். அன்றிரவு அனைவரும் உறங்கிய பின்னர் கேதர்நாத் அறைக்கு சென்ற அவர், கேதர்நாத், அவருடைய மனைவி பிரதிமா தேவி மற்றும் அவரின் மகள்கள் டிம்பிள் குமாரி, சோனி குமாரி சிங் ஆகியோரை உள்ளே வைத்து பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இதில் கேதர்நாத்தின் மனைவி மற்றும் அவரது மகள் டிம்பிள் குமாரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது குறித்து மனோஜ் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் காதிகார் மாவட்டம் சாண்டி கிராமத்தை சேர்ந்த கேதர்நாத் சிங்கிற்கும் அவருடைய சகோதரர் மனோஜ் சிங்கிற்கும் இடையே பரம்பரை சொத்தை விற்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சகோதரர்கள் இருவரும் நேற்று மாலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வந்து சமாதானம் செய்த பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்றுள்ளனர்.
இருப்பினும் மனோஜ், கேதர்நாத் மீது கோபத்துடன் இருந்துள்ளார். அன்றிரவு அனைவரும் உறங்கிய பின்னர் கேதர்நாத் அறைக்கு சென்ற அவர், கேதர்நாத், அவருடைய மனைவி பிரதிமா தேவி மற்றும் அவரின் மகள்கள் டிம்பிள் குமாரி, சோனி குமாரி சிங் ஆகியோரை உள்ளே வைத்து பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
இதில் கேதர்நாத்தின் மனைவி மற்றும் அவரது மகள் டிம்பிள் குமாரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இது குறித்து மனோஜ் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X