search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை-சகோதரர் வெறிச்செயல்
    X

    சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எரித்துக் கொலை-சகோதரர் வெறிச்செயல்

    பீகார் மாநிலம் காதிகார் மாவட்டத்தில் உள்ள சாண்டி என்ற கிராமத்தில் சொத்து தகராறில் மூன்று பெண்கள் உட்பட 4 பேரை உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் காதிகார் மாவட்டம் சாண்டி கிராமத்தை சேர்ந்த கேதர்நாத் சிங்கிற்கும் அவருடைய சகோதரர் மனோஜ் சிங்கிற்கும் இடையே பரம்பரை சொத்தை விற்பதில் தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக சகோதரர்கள் இருவரும் நேற்று மாலை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் வந்து சமாதானம் செய்த பின் இருவரும் அவரவர் அறைக்கு சென்றுள்ளனர்.

    இருப்பினும் மனோஜ், கேதர்நாத் மீது கோபத்துடன் இருந்துள்ளார். அன்றிரவு அனைவரும் உறங்கிய பின்னர் கேதர்நாத் அறைக்கு சென்ற அவர், கேதர்நாத், அவருடைய மனைவி பிரதிமா தேவி மற்றும் அவரின் மகள்கள் டிம்பிள் குமாரி, சோனி குமாரி சிங் ஆகியோரை உள்ளே வைத்து பூட்டி விட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.

    இதில் கேதர்நாத்தின் மனைவி மற்றும் அவரது மகள் டிம்பிள் குமாரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    இது குறித்து மனோஜ் சிங் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×