என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீவிரவாதி என்பதை நிரூபித்துவிட்டார் சலாஹூதீன்: மத்திய அரசு
Byமாலை மலர்3 July 2017 4:23 PM GMT (Updated: 3 July 2017 4:23 PM GMT)
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனின் தனது சமீபத்திய கருத்துக்கள் மூலம் தீவிரவாதி என்பதை உறுதி செய்திருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.
ஆனால் தாங்கள் தீவிரவாதிகள் இல்லை என்றும், இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலைக்கான தங்கள் போராட்டம் தொடரும் என்றும் சலாஹுதீன் கூறியிருந்தார். அத்துடன், இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு தங்கள் அமைப்பிடம் வலிமை இருப்பதாகவும் கூறியிருந்தார். சலாஹூதீனின் இந்த அடாவடி பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை செய்தித் தொடர்பாளர் அசோக் பிரசாத் கூறுகையில், ‘சலாஹூதீனை எப்போதும் தீவிரவாதியாகவே மத்திய அரசு கூறியிருந்தது. அவரது கருத்துக்களும் அதனை உறுதி செய்துள்ளன. அமெரிக்கா கூறியபடி, சர்வதேச தீவிரவாதி என்ற பதவிக்கு அவர் பொருத்தமானவர்’ என்றார்.
தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் நிதி வழங்குவதற்கு சலாஹூதீன் கருவியாகவும் உள்ளார், தீவிரவாதிகளுக்கு வேறு வகையான உதவியும் செய்கிறார் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையத் சலாஹூதீனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா கடந்த மாதம் அறிவித்தது.
ஆனால் தாங்கள் தீவிரவாதிகள் இல்லை என்றும், இந்தியாவிடம் இருந்து காஷ்மீர் விடுதலைக்கான தங்கள் போராட்டம் தொடரும் என்றும் சலாஹுதீன் கூறியிருந்தார். அத்துடன், இந்திய பகுதிக்குள் தாக்குதல் நடத்தும் அளவுக்கு தங்கள் அமைப்பிடம் வலிமை இருப்பதாகவும் கூறியிருந்தார். சலாஹூதீனின் இந்த அடாவடி பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மத்திய உள்துறை செய்தித் தொடர்பாளர் அசோக் பிரசாத் கூறுகையில், ‘சலாஹூதீனை எப்போதும் தீவிரவாதியாகவே மத்திய அரசு கூறியிருந்தது. அவரது கருத்துக்களும் அதனை உறுதி செய்துள்ளன. அமெரிக்கா கூறியபடி, சர்வதேச தீவிரவாதி என்ற பதவிக்கு அவர் பொருத்தமானவர்’ என்றார்.
தீவிரவாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் நிதி வழங்குவதற்கு சலாஹூதீன் கருவியாகவும் உள்ளார், தீவிரவாதிகளுக்கு வேறு வகையான உதவியும் செய்கிறார் என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X