என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவுக்கு ரூ.795 கோடி வறட்சி நிவாரணம்: மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்29 Jun 2017 9:57 AM GMT (Updated: 29 Jun 2017 9:57 AM GMT)
கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக 795 கோடி ரூபாய் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இதனால் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை செலுத்த முடியாமல் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து மாநில அரசு, வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் மட்ட குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கடந்த ஆண்டு பாதிப்படைந்த கர்நாடக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து 795 கோடி ரூபாய் அளிப்பது என அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ககோடு திம்மப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தோம். விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துக்கூறி, 3 ஆயிரத்து 310 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என கேட்டிருந்தோம். ஆனால் மத்திய அரசு 795 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2015-16 ஆம் ஆண்டு அளித்த வறட்சி நிவாரணத்தை விட அதிகம்” என தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். இதனால் வங்கியில் வாங்கிய பயிர் கடன்களை செலுத்த முடியாமல் அவர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து மாநில அரசு, வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர் மட்ட குழு கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கடந்த ஆண்டு பாதிப்படைந்த கர்நாடக விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியில் இருந்து 795 கோடி ரூபாய் அளிப்பது என அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, கர்நாடக மாநில வேளாண்துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ககோடு திம்மப்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், “நாங்கள் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்தோம். விவசாயிகளின் பிரச்னைகளை எடுத்துக்கூறி, 3 ஆயிரத்து 310 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் அளிக்க வேண்டும் என கேட்டிருந்தோம். ஆனால் மத்திய அரசு 795 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது கடந்த 2015-16 ஆம் ஆண்டு அளித்த வறட்சி நிவாரணத்தை விட அதிகம்” என தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X