search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில் கொடூரம்: இளம்பெண், சிறுமி கூட்டு பலாத்காரம்
    X

    உ.பி.யில் கொடூரம்: இளம்பெண், சிறுமி கூட்டு பலாத்காரம்

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இளம்பெண்ணும், சிறுமியும் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர்.
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்தி கிராமத்தை சேர்ந்தவர் அஜய் பஸ்வான். இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை நண்பர்கள் உதவியுடன் நேற்று கடத்திச் சென்று, தனது வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தார்.

    வீடு திரும்பிய சிறுமி, நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பந்தேஷ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜய் பஸ்வானை கைது செய்தனர்.

    இதேபோல், டியோரியா மாவட்டத்தில் உள்ள பலுவானி பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணை நேற்றிரவு கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பல், அப்பெண்ணை மறைவான இடத்திற்கு கொண்டு சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று, காலையில் வீடு திரும்பிய அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் போலீசில் சென்று புகாரளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் மர்மகும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×