என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பருவமழை டெல்லியை இந்த வாரத்தில் தாக்கும்: கனமழை பெய்யும் என எச்சரிக்கை
Byமாலை மலர்26 Jun 2017 2:07 PM GMT (Updated: 26 Jun 2017 2:07 PM GMT)
தென்மேற்கு பருவமழை டெல்லியை இன்னும் மூன்று நான்கு நாட்களில் தாக்கும். இதனால் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் இந்த மாதம் தொடக்கத்தில் தொடங்கியது. வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கிய பருவமழைக் காரணமாக, இந்த வருடம் அதிக அளவில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், இன்றுவரை வழக்கமான மழையை விட 1 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்று கூறியுள்ள இந்திய வானிலை துறை, இன்னும் மூன்று நான்கு நாட்களில் பருவமழை டெல்லியை தாக்கும் என கூறியுள்ளது. அப்போது மிகமிக அதிக அளவில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
மேலும், குறிப்பாக கோங்கன் மற்றும் கோவாவில் அதிக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. டெல்லியை தாக்கும் அதே நேரத்தில் குஜராத், மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
கடற்கரை பகுதியான கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், குஜராத் பகுதிகள் மற்றும் கேரளாவில் நாளை அளவிற்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் விதர்பா, மத்திய பிரதேசம், வடக்கு பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மலைப்பகுதிகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், அசாம், மேகலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என்று கூறியுள்ள இந்திய வானிலை துறை, இன்னும் மூன்று நான்கு நாட்களில் பருவமழை டெல்லியை தாக்கும் என கூறியுள்ளது. அப்போது மிகமிக அதிக அளவில் மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
மேலும், குறிப்பாக கோங்கன் மற்றும் கோவாவில் அதிக மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. டெல்லியை தாக்கும் அதே நேரத்தில் குஜராத், மத்திய பிரதேசம் மாநிலத்திலும் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
கடற்கரை பகுதியான கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், குஜராத் பகுதிகள் மற்றும் கேரளாவில் நாளை அளவிற்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் விதர்பா, மத்திய பிரதேசம், வடக்கு பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்காள மலைப்பகுதிகள், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள், அசாம், மேகலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் திரிபுராவிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X