என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வரும் 28-ம் தேதி காஷ்மீர் பயணம்
Byமாலை மலர்26 Jun 2017 7:04 AM GMT (Updated: 26 Jun 2017 7:04 AM GMT)
பா.ஜ.க. கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வரும் ஜூன் 28-ம் தேதி காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவருடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு செல்கின்றார்.
புதுடெல்லி:
ஜனாதிபதி தேர்தல் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கடந்த 23-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, தனக்கு வாக்களிக்குமாறு ஆதரவு கோருவதற்காக பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.
முதல்கட்டமாக தனது சொந்த மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்திற்கு நேற்று அவர் சென்றார். லக்னோவில் உள்ள முதல்-மந்திரி ஆதித்யநாத் வீட்டிற்கு சென்ற ராம்நாத் கோவிந்த், அங்கு ஆளும் பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும், எம்.பி.க்களிடமும் ஆதரவு கோரினார்.
இந்நிலையில், ராம்நாத் கோவிந்த் வரும் ஜூன் 28-ம் தேதி காஷ்மீரில் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஸ்ரீநகர் செல்லும் ராம்நாத்துடன் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு செல்கின்றார்.
அங்கு பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பா.ஜ.க. அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X