என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீரா குமார் எப்படி பட்டவர் தெரியுமா?: சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் வெளியிட்ட வீடியோ
Byமாலை மலர்25 Jun 2017 2:10 PM GMT (Updated: 25 Jun 2017 2:10 PM GMT)
காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார் பற்றி மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சுவாரஸ்சியமான வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:
பா.ஜ.க. கூட்டணி சார்பில் பீகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மீரா குமார் பற்றி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சுவாரஸ்சியமான வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2013-ம் ஆண்டு மீராக்குமார் மக்களவை சபாநாயகராக இருந்த போது சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது, மக்களவையில் மீராகுமார் முன்னிலையில் சுஷ்மா பேச முற்பட்ட போது அதற்கு இடையூறு செய்வது போன்ற வீடியோவை தான் அவர் பதிவிட்டுள்ளார்.
எதிர்கட்சி உறுப்பினர்களை மீராக்குமார் இப்படி தான் நடத்தினார் என்றும் 6 நிமிட எனது உரையில் 60 முறை அவர் குறுக்கிட்டார் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X