என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தான்: 3 குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய் மட்டும் உயிருடன் மீட்பு
Byமாலை மலர்24 Jun 2017 10:58 AM GMT (Updated: 24 Jun 2017 10:58 AM GMT)
குடும்ப பிரச்சனை காரணமாக 3 குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் பார்மார் மாவட்டத்தில் உள்ள கச்டாவ் கிராமத்தை சேர்ந்தவர் கிர்னிதேவி (35). இவருக்கு கல்பனா(6), கவிதா(4), ஹேமலதா (1) என 3 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கிர்னிதேவி, தனது 3 குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், "வரும் வழியில் குழந்தைகள் இறந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிர்னிதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.
இதுகுறித்து தோரிமனா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப பிரச்rனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த கிர்னிதேவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மார் மாவட்டத்தில் உள்ள கச்டாவ் கிராமத்தை சேர்ந்தவர் கிர்னிதேவி (35). இவருக்கு கல்பனா(6), கவிதா(4), ஹேமலதா (1) என 3 பெண் குழந்தைகள் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கிர்னிதேவி, தனது 3 குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள பெரிய தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், "வரும் வழியில் குழந்தைகள் இறந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான நிலையில் கிர்னிதேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என தெரிவித்தனர்.
இதுகுறித்து தோரிமனா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குடும்ப பிரச்rனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த கிர்னிதேவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X