search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
    X

    டெல்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

    டெல்லி அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் 25 வயது வாலிபர் ரெயில் முன்னர் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லி அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் 25 வயது வாலிபர் ரெயில் முன்னர் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தலைநகர் டெல்லி அருகே உள்ள நொய்டா மெட்ரோ ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த 25 வயது வாலிபர், திடீரென, 16-வது செக்டார் செல்லும் மெட்ரோ ரெயில் முன்னர் பாய்ந்து விழுந்தார். உடனே, ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் சமீப காலமாக மெட்ரோ ரெயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×