search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமான போக்குவரத்து நெரிசல்: டெல்லியில் தரையிறங்க இருந்த 7 விமானங்கள் மாற்றிவிடப்பட்டது
    X

    விமான போக்குவரத்து நெரிசல்: டெல்லியில் தரையிறங்க இருந்த 7 விமானங்கள் மாற்றிவிடப்பட்டது

    விமான போக்குவரத்து நெரிசல் காரணமாக டெல்லியில் தரையிறங்க இருந்த வெளிநாட்டு விமானங்கள் ஜெய்ப்பூருக்கு மாற்றிவிடப்பட்டது.
    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஒரே நேரத்தில் பல விமானங்கள் தரையிறங்குவதும், விமானங்கள் புறப்படுவதுமாக இருக்கும்.

    இன்று விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில் சீனாவில் இருந்த விமானம், வங்காள தேசத்தில் இருந்து வந்த விமானம் மற்றும் புவனேஸ்வர், ஐதராபாத், பெங்களூரு மற்றும் பந்த் நகரில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க தயாராக இருந்தனர். இதனால் ஏர் டிராபிக் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் தரையிறங்க வேண்டிய விமானங்கள் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

    பின்னர் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு அந்த விமானங்கள் மாற்றிவிடப்பட்டது. பின்னர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமாங்கள் புறப்பட்டு சென்றனர்.
    Next Story
    ×