search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கர்: என்கவுண்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
    X

    சத்தீஸ்கர்: என்கவுண்ட்டரில் 2 பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

    சத்தீஸ்கர் மாநிலத்தில் போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ராய்ப்பூர்:

    நாடு முழுவதும் நக்சலைட்டுகள் நடமாட்டமுள்ள பகுதிகளில் மத்திய ரிசர்வ் படை வீரர்களும், மாநில போலீசாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயன்பூர் மாவட்டத்தில் உள்ள ஹஸ்னர் கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 

    சிறப்பு அதிரடி படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் குழு போலீசாரும் இணைந்து இந்த என்கவுண்ட்டர் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அப்போது போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் இரண்டு பெண் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

    இந்த என்கவுண்ட்டர் குறித்து நாராயன்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி சந்தோஷ் சிங் கூறுகையில், “நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் அபுஜ்மத் பகுதியில் 300 கிலோமிட்டர் சுற்றளவில் இந்த தேடுதல் பணி நடைபெற்றது.
     அப்போது ஹஸ்னர் பகுதியில் உள்ள நக்சலைட்டுகள் முகாமை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்த நக்சலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது போலீசார் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. 

    துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு அந்த பகுதியில் இரண்டு பெண் நக்சலைட்டுகளும், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது” என்று தெரிவித்தார். 
    Next Story
    ×