search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 வங்காளதேசத்தவர்கள் சுட்டுக்கொலை
    X

    இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 2 வங்காளதேசத்தவர்கள் சுட்டுக்கொலை

    மேற்கு வங்க மாநிலத்தில் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்காளதேசத்தைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற வங்காளதேசத்தைச் சேர்ந்த இருவரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

    மேற்குவங்க மாநிலம் நாதியா மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று மாலை வங்கதேசத்திலிருந்து இரண்டு நபர்கள் எல்லை தாண்டி இந்திய பகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

    இருவரையும் கண்டுகொண்ட பாதுகாப்பு படையினர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்தனர். ஆனால், அந்த இரு நபர்களும் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதற்கு இருவர் மீதும் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம் நீடித்த இந்த சண்டையில் இரு நபர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    Next Story
    ×