என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திரிகையாளர் கொலை வழக்கு: லாலு பிரசாத் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி. கைது
Byமாலை மலர்29 May 2017 8:03 AM GMT (Updated: 29 May 2017 8:03 AM GMT)
பத்திரிகையாளர் கொலை வழக்கில் லாலு பிரசாத் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கைது செய்யப்பட்டார்.
பாட்னா:
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் துணை நிறுவனமான இந்துஸ்தான் இந்தி பதிப்பின் சிவான் பகுதி தலைமை செய்தியாளராக பணியாற்றியவர் ராஜ்தியோ ரஞ்சன். இவர் சிவானில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதி மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர் ராஜ்தியோ ரஞ்சன்.
இந்த கொலையில் பீகார் முன்னாள் எம்.பி.யும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகருமான சகாபுதீன் மீது சந்தேகம் இருப்பதாக ரஞ்சனின் மனைவி போலீசில் புகார் செய்து இருந்தார்.
இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சகாபுதீன் தயாரித்து வைத்திருந்த 23 பேர் கொண்ட கொலைப் பட்டியலில் ராஜ்தியோ ரஞ்சனின் பெயர் 7-வது இடத்தில் இடம் பெற்று இருந்தார்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சகாபுதீன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. இதுபற்றி செய்திகள் வெளியிட்டதால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்து கொலை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சகாபுதீன் டெல்லி திகார் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுவித்து வருகிறார். ஜெயிலில் இருந்தவாறே தனது ஆட்களை ஏவி கொலை செய்திருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டியது. இதையடுத்து சகாபுதீனை பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டது.
இதற்காக முசாபர்பூர் கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. கோர்ட்டு அனுமதி அளித்தை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திகார் ஜெயிலில் இருக்கும் சகாபுதீனை மீண்டும் கைது செய்து விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து சகாபுதீனிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் துணை நிறுவனமான இந்துஸ்தான் இந்தி பதிப்பின் சிவான் பகுதி தலைமை செய்தியாளராக பணியாற்றியவர் ராஜ்தியோ ரஞ்சன். இவர் சிவானில் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதி மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பத்திரிகையாளர் ராஜ்தியோ ரஞ்சன்.
இந்த கொலையில் பீகார் முன்னாள் எம்.பி.யும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய பிரமுகருமான சகாபுதீன் மீது சந்தேகம் இருப்பதாக ரஞ்சனின் மனைவி போலீசில் புகார் செய்து இருந்தார்.
இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சகாபுதீன் தயாரித்து வைத்திருந்த 23 பேர் கொண்ட கொலைப் பட்டியலில் ராஜ்தியோ ரஞ்சனின் பெயர் 7-வது இடத்தில் இடம் பெற்று இருந்தார்.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சகாபுதீன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளது. இதுபற்றி செய்திகள் வெளியிட்டதால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்து கொலை பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சகாபுதீன் டெல்லி திகார் ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுவித்து வருகிறார். ஜெயிலில் இருந்தவாறே தனது ஆட்களை ஏவி கொலை செய்திருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டியது. இதையடுத்து சகாபுதீனை பத்திரிகையாளர் கொலை வழக்கில் கைது செய்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டது.
இதற்காக முசாபர்பூர் கோர்ட்டில் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது. கோர்ட்டு அனுமதி அளித்தை தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் திகார் ஜெயிலில் இருக்கும் சகாபுதீனை மீண்டும் கைது செய்து விசாரணைக்காக டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து சகாபுதீனிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X