என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பதான்கோட் அருகே ராணுவ சீருடைகளுடன் மர்ம பை கண்டெடுப்பு - உஷார் நிலையில் பாதுகாப்பு படைகள்
Byமாலை மலர்29 May 2017 5:30 AM GMT (Updated: 29 May 2017 5:30 AM GMT)
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் உள்ள ராணுவதளம் அருகே நேற்று மாலை மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில் ராணுவ சீருடைகள் இருந்துள்ளன. இதனால், மொத்த நகரும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில போலீசார்
தீவிர கண்கானிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதே போல் மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது, அதில் செல்போன் டவர்களுக்கு பொருத்தப்படும்
பேட்டரி இருந்தது. அப்போதும், இதேபோல நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்நகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 வீரர்களை சுட்டுக்கொன்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
அப்போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் உடைகளை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராணுவ சீருடைகளுடன் மர்ம பை கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட் ராணுவதளம் அருகே கண்டெடுக்கப்பட்ட மர்ம பையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படைகள் நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நகரில் உள்ள ராணுவதளம் அருகே நேற்று மாலை மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில் ராணுவ சீருடைகள் இருந்துள்ளன. இதனால், மொத்த நகரும் உஷார் படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு படைகள் மற்றும் மாநில போலீசார்
தீவிர கண்கானிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் இதே போல் மர்ம பை ஒன்று கண்டெடுக்கப்பட்டது, அதில் செல்போன் டவர்களுக்கு பொருத்தப்படும்
பேட்டரி இருந்தது. அப்போதும், இதேபோல நகரெங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இந்நகரில் உள்ள விமானப்படை தளத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 7 வீரர்களை சுட்டுக்கொன்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.
அப்போது தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தின் உடைகளை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ராணுவ சீருடைகளுடன் மர்ம பை கண்டெடுக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பு படையினர் உஷார் அடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X