search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத்தில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் - 4 பேர் கைது
    X

    குஜராத்தில் ரூ.1 கோடி செல்லாத நோட்டுகள் பறிமுதல் - 4 பேர் கைது

    குஜராத்தில் போலீசார் வாகன சோதனையின் போது செல்லாத ரூபாய் நோட்டுகள் ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    பாரூச்:

    குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ஷிடால் சவுக் பகுதிக்கு நேற்று வந்த ஒரு சொகுசு காரை பாரூச் சிறப்பு போலீஸ் படையினர் சந்தேகத்தின் பேரில் மடக்கி அதில் இருந்த 4 பேரிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அந்த காரை சோதனை போட்டனர். அப்போது அந்த காரில் இருந்த ஒரு டிராவல் பேக்கை திறந்து பார்த்தபோது அதில் செல்லாத ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் மொத்தம் 11 ஆயிரத்து 322 இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 98 ஆயிரம் ஆகும்.



    காரில் வந்த 4 பேரும் கமிஷன் அடிப்படையில் செல்லாத நோட்டுகளை மாற்றுவதற்கு கொண்டு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வைத்திருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×