search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் விழுந்து நொறுங்கிய போர் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
    X

    அசாமில் விழுந்து நொறுங்கிய போர் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

    அசாமில் விழுந்து நொறுங்கிய போர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் விமானத்தின் கருப்பு பெட்டி நேற்று மீட்கப்பட்டது.
    தேஜ்பூர்:

    அசாம் மாநிலத்தின் தேஜ்பூர் நகர விமானப்படை தளத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பயிற்சிக்காக புறப்பட்டு சென்ற சுகோய்-30 ரக போர் விமானம் சிறிது நேரத்தில் திடீரென மாயமானது.

    இதையடுத்து அந்த விமானத்தையும், அதில் இருந்த 2 விமானிகளையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இரு நாட்களுக்கு முன்பு அந்த போர் விமானத்தின் சிதைந்த பாகங்கள் தேஜ்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று ராணுவ வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். எனினும் விமானிகளையோ, விமானத்தின் கருப்பு பெட்டியையோ அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கிடந்த இடத்திற்கு சற்று தொலைவில் விமானத்தின் கருப்பு பெட்டி நேற்று மீட்கப்பட்டது.

    அந்த விமானத்தில் இருந்த 2 விமானிகளின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து அந்த பகுதியில் தேடும் பணி நடந்து வருகிறது. தற்போது மீட்கப்பட்டு உள்ள கருப்பு பெட்டி மூலம் கடைசியாக பதிவான விமானிகளின் உரையாடலை வைத்து விமானம் எவ்வாறு விபத்துக்கு உள்ளானது என்பது கண்டறியப்படும். 
    Next Story
    ×