என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் 28-ம் தேதி வெளியாகிறது
Byமாலை மலர்26 May 2017 4:20 PM GMT (Updated: 26 May 2017 4:20 PM GMT)
சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 28) வெளியிடப்படுகிறது. சி.பி.எஸ்.இ.-ன் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
புதுடெல்லி:
தமிழக அரசு நடத்தும் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சி.பி.எஸ்.இ. ‘பிளஸ்-2’ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
கடினமான கேள்விகளுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண்ணை சி.பி.எஸ்.இ. ரத்து செய்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சி.பி.எஸ்.இ. அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மதிப்பெண்ணை வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமுல்படுத்துவதா அல்லது மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வந்தது. அப்போது ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 28) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://www.results.nic.in , http://www.cbseresults.nic.in , http://www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு நடத்தும் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சி.பி.எஸ்.இ. ‘பிளஸ்-2’ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
கடினமான கேள்விகளுக்கு வழங்கப்படும் கருணை மதிப்பெண்ணை சி.பி.எஸ்.இ. ரத்து செய்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு சி.பி.எஸ்.இ. அறிவிப்பை ரத்து செய்ததுடன் கருணை மதிப்பெண்ணை வழங்கவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமுல்படுத்துவதா அல்லது மேல்முறையீடு செய்வதா? என்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசனை நடத்தி வந்தது. அப்போது ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என சட்ட வல்லுநர்கள் அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ. பிளஸ்2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 28) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை http://www.results.nic.in , http://www.cbseresults.nic.in , http://www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X