என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவிலுக்கு சென்று திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்25 May 2017 10:29 AM GMT (Updated: 25 May 2017 10:29 AM GMT)
மத்திய பிரதேச மாநிலத்தில் கோவிலுக்கு சென்று திரும்பியபோது டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் மாவட்டம், கண்டேரியா கச்ரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலுக்கு டிராக்டரில் சென்றுள்ளனர். கோவிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு டிராக்டரில் இன்று ஊருக்கு திரும்பினர்.
நீமச் மாவட்டம் நயாகோன் அருகே உள்ள கான்காபட்டா கிராமத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தாறுமாறாக சென்றுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதனால் டிராக்டரில் பயணித்தவர்கள் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்டனர்.
இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் மாவட்டம், கண்டேரியா கச்ரியா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் உள்ள ஒரு கோவிலுக்கு டிராக்டரில் சென்றுள்ளனர். கோவிலில் வழிபாடுகளை முடித்துக்கொண்டு டிராக்டரில் இன்று ஊருக்கு திரும்பினர்.
நீமச் மாவட்டம் நயாகோன் அருகே உள்ள கான்காபட்டா கிராமத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் தாறுமாறாக சென்றுள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் அந்த டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்துள்ளது. இதனால் டிராக்டரில் பயணித்தவர்கள் டிராக்டரின் அடியில் சிக்கிக்கொண்டனர்.
இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X