என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேசன் கடைக்குச் சென்ற 2 சிறுமிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்
Byமாலை மலர்25 May 2017 9:55 AM GMT (Updated: 25 May 2017 9:55 AM GMT)
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரில் ரேசன் கடைக்குச் சென்ற 2 சிறுமிகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசாபர்நகர்:
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது நவாலா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது ரேசன் டீலரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த சிறுமிகளை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 22ம் தேதி நடந்துள்ளது.
வீடு திரும்பிய சிறுமிகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு சிறுமிகளையும் பலாத்காரம் செய்த ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் ராஜன், சச்சின், ரோகித் மற்றும் அங்கித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முசாபர்நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ளது நவாலா கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளனர். அப்போது ரேசன் டீலரின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அந்த சிறுமிகளை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். பின்னர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, சிறுமிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 22ம் தேதி நடந்துள்ளது.
வீடு திரும்பிய சிறுமிகள் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இரண்டு சிறுமிகளையும் பலாத்காரம் செய்த ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் ராஜன், சச்சின், ரோகித் மற்றும் அங்கித் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், குற்றவாளிகள் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என முசாபர்நகர் சீனியர் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X