என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க மோடிக்கு அழைப்பு விடுத்தேன்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின்பு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடியை சந்தித்தபோது தமிழக திட்டங்கள் குறித்து பேச்சு நடத்தினேன். அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை.
தமிழக சட்டசபையில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா படம் திறக்கப்பட இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன்.
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது.
சென்னையில் டிசம்பர் மாதம் இறுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.
அப்போது ஜனாதிபதி தேர்தல் குறித்து பேசினீர்களா? என்று நிருபர்கள் கேட்டதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கையில், அதுபற்றி பேச வில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றார்.
முன்னதாக பிரதமரிடம் கொடுத்த கோரிக்கை மனுவின் சாராம்சத்தை நிருபர்களிடம் அவர் விளக்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்