என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை
Byமாலை மலர்24 May 2017 3:12 AM GMT (Updated: 24 May 2017 3:12 AM GMT)
முன்னாள் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
ஹசாரிபாக்:
லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங். கடந்த 1995-ம் ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவருடைய மனைவி, பிரபுநாத் சிங், அவருடைய சகோதரர்கள் தீனாநாத் சிங், ரிதேஷ் சிங் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பிரபுநாத் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. பிரபுநாத் சிங் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 18-ந் தேதி நீதிபதி சுரேந்திர சர்மா தீர்ப்பு அளித்தார். இந்நிலையில், தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தலா ரூ.40 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதாதள முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங். கடந்த 1995-ம் ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் சிங் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அவருடைய மனைவி, பிரபுநாத் சிங், அவருடைய சகோதரர்கள் தீனாநாத் சிங், ரிதேஷ் சிங் ஆகியோர் மீது போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், பிரபுநாத் சிங் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. பிரபுநாத் சிங் உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த 18-ந் தேதி நீதிபதி சுரேந்திர சர்மா தீர்ப்பு அளித்தார். இந்நிலையில், தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.
3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தலா ரூ.40 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால், கூடுதலாக 6 மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X