என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரே ஒரு டுவீட் - கடத்தப்பட்ட நான்கு சிறுவர்களை உடனடியாக மீட்ட ஒரிசா போலீஸ்
Byமாலை மலர்23 May 2017 11:28 PM GMT (Updated: 23 May 2017 11:29 PM GMT)
ஒரிசா மாநிலத்தில் சாமானியர் ஒருவர் பதிவு செய்த ஒரு டுவீட்டால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
புபனேஷ்வர்:
ஒரிசா மாநிலத்தில் சாமானியர் ஒருவர் பதிவு செய்த ஒரு டுவீட்டால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் நந்தா என்பவர் நேற்று, சம்பல்பூர் செல்லும் பேருந்தில் நான்கு சிறுவர்கள் வல்லுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அனேகமாக, அவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படலாம் என அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் முகவரிக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார்.
அமித் நந்தாவின் புகாரை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அம்மாநில போலீசார் தீவிரமாக செயல்பட்டு குறிப்பிடப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, புல்பானி என்ற இடத்தின் அருகே நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதோடு, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கையையும், புகாரளித்த அமித் நந்தாவையும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டியுள்ளார்.
ஒரிசா மாநிலத்தில் சாமானியர் ஒருவர் பதிவு செய்த ஒரு டுவீட்டால் கொத்தடிமை வேலைக்கு கடத்தப்பட்ட நான்கு சிறுவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சேர்ந்த அமித் நந்தா என்பவர் நேற்று, சம்பல்பூர் செல்லும் பேருந்தில் நான்கு சிறுவர்கள் வல்லுக்கட்டாயமாக கொண்டு செல்லப்படுகின்றனர். அனேகமாக, அவர்கள் கொத்தடிமைகளாக கொண்டு செல்லப்படலாம் என அம்மாநில முதல்வர் அலுவலகத்தின் முகவரிக்கு டுவிட்டர் மூலம் புகார் அனுப்பினார்.
அமித் நந்தாவின் புகாரை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், அம்மாநில போலீசார் தீவிரமாக செயல்பட்டு குறிப்பிடப்பட்ட இடத்தை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, புல்பானி என்ற இடத்தின் அருகே நான்கு சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதோடு, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசாரின் அதிரடி நடவடிக்கையையும், புகாரளித்த அமித் நந்தாவையும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X