search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தி மொழி கற்பித்தலை ஊக்குவியுங்கள், கட்டாயப்படுத்தாதீர்கள்: மத்திய அரசு
    X

    இந்தி மொழி கற்பித்தலை ஊக்குவியுங்கள், கட்டாயப்படுத்தாதீர்கள்: மத்திய அரசு

    இந்தி மொழி கற்பித்தலை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான அரசு இந்தி மொழிப் பாடத்தை, இந்தி தாய் மொழி அல்லாத மாநில அரசுகள் மீது திணிக்க முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், இந்தி மொழி கற்பிப்பதை மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும், கட்டாயப்படுத்தக் கூடாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தலைமையில் நடைபெற்ற இந்தி ஆலோசனை குழு கூட்டத்தில் இந்த முடிவு செய்யப்பட்டது.

    முன்னதாக, சி.பி.எஸ்.இ.-ன் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் கேந்திர வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயப்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தி பேசாத மாநிலங்களின் விமர்சனங்களுக்கு ஆளானது.

    அதிகாரபூர்வமான மொழிக்கான பாராளுமன்றக் குழு அளித்த பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

    எதிர்ப்பை தொடர்ந்து இந்தி மொழியை கட்டாயப்படுத்த கூடாது என்ற நிலைப்பாட்டிற்கு மத்திய அரசு வந்துள்ளதாக கருதப்படுகிறது.
    Next Story
    ×