search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்று 26-வது நினைவுநாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் அஞ்சலி
    X

    இன்று 26-வது நினைவுநாள்: ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல், மன்மோகன் சிங் அஞ்சலி

    தீவிரவாதத்துக்கு தனது இன்னுயிரை நீத்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவுநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
    புதுடெல்லி:

    தீவிரவாதத்துக்கு தனது இன்னுயிரை நீத்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 26-வது ஆண்டு நினைவுநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

    தமிழ்நாட்டில் 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரம் செய்யவந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 21-5-1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவரது 26-வது நினைவுதினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.



    இதையொட்டி, டெல்லியில் உள்ள ராஜீவ் நினைவிடமான வீர்பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், சோனியாவின் மகள் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபார்ட் வதேரா டெல்லி முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித், காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    Next Story
    ×