என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோடியுடன் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை: சந்திப்புக்கு பிறகு பன்னீர் செல்வம் பேட்டி
Byமாலை மலர்19 May 2017 1:59 PM GMT (Updated: 19 May 2017 1:59 PM GMT)
பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்தே ஆலோசனை செய்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
பன்னீர் செல்வம் மேலும் பேசியதாவது:-
தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளை பிரதமர் கேட்டறிந்தார்.
சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பினால் பா.ஜ.க.வுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நிர்வாகிகள், செயல்வீரர்கள்-வீராங்கனைகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர் செல்வம் தமிழகத்தின் பிரச்சனைகள் குறித்தே ஆலோசனை செய்ததாகவும், அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
பன்னீர் செல்வம் மேலும் பேசியதாவது:-
தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக விவசாயிகள் பிரச்சனையில் மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம். விவசாயிகள் தொடர்பான பிரச்சனைகளை பிரதமர் கேட்டறிந்தார்.
சேலம் உருக்காலை தனியார்மயமாவதை தடுக்க வேண்டும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தோம். அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. இந்த சந்திப்பினால் பா.ஜ.க.வுடன் நெருக்கம் அதிகரித்துள்ளது என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X