என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் கொலை: ராணுவ சிறப்பு அதிகார சட்டம் வேண்டும் என பா.ஜ.க எம்.எல்.ஏ போர்க்கொடி
Byமாலை மலர்13 May 2017 9:15 AM GMT (Updated: 13 May 2017 9:15 AM GMT)
கேரள மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுவதை தொடர்ந்து அங்கு ராணுவ சிறப்பு அதிகார சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது34). இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு அருகே முட்டம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த ஒரு சொகுசு கார் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வினர் இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அம்மாநில ஆளுநர் சதாசிவத்தை இன்று சந்தித்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது குறித்து முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், கண்ணூர் மாவட்டத்தை பதற்றமான பகுதியாக அறிவித்து, அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கக்கன்பாரா பகுதியை சேர்ந்தவர் பிஜூ(வயது34). இவர் அந்த பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தலைவராக இருந்தார். அவர் நேற்று மாலை 4 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு அருகே முட்டம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த ஒரு சொகுசு கார் அவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிஜூவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தான் கொலை செய்ததாக குற்றம் சாட்டிய பா.ஜ.க.வினர் இந்த கொலையை கண்டித்து கண்ணூர் மாவட்டத்தில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், அம்மாநில ஆளுநர் சதாசிவத்தை இன்று சந்தித்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவது குறித்து முறையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், கண்ணூர் மாவட்டத்தை பதற்றமான பகுதியாக அறிவித்து, அங்கு ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X