என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடி, சுஷ்மா உடன் ரஷ்யா துணை பிரதமர் டிமிட்ரி சந்திப்பு
Byமாலை மலர்10 May 2017 11:13 AM GMT (Updated: 10 May 2017 11:13 AM GMT)
அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.
புதுடெல்லி:
ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஜின் ஒரு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனது பயணத்தின் முக்கிய பகுதியாக வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டிமிட்ரி இன்று சந்தித்தார்.
சந்திப்புக்கு பிறகு ரஷ்ய துணை பிரதமர் மற்றும் சுஷ்மா சுவராஜ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சுஷ்மா, “ரஷ்யா உடனான உறவு இந்திய வெளியுறவுக் கொள்கையின் வலிமையான தூண்களில் ஒன்று. இந்திய-ரஷ்யா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜூன் மாதம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்ல உள்ளார்.
உள்நாட்டு அணுசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை முன்னோக்கி எடுத்து செல்வது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்றார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை டிமிட்ரி ரோகோஜின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பிரதமர் மோடியுடன், டிமிட்ரி ரோகோஜின் இரு நாட்டு உறவுகள் குறித்து கலந்தாலோசனை செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X