என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுக்க முடிவு
Byமாலை மலர்30 April 2017 2:17 AM GMT (Updated: 30 April 2017 2:17 AM GMT)
நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
சத்தீஷ்கார் மாநிலம், சுக்மாவில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினர் 25 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இப்படி பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக உயிர் இழக்கிறபோது, அவர்களது குடும்பங்களை வழிநடத்துவதற்கு யாரும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இனி நாட்டுக்காக உயிர் இழக்கிற பாதுகாப்பு படையினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுத்து உதவிக்கரம் நீட்டுவார்கள்.
மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் பலியாகிறபோது அவர்களது குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க கவுரவ செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி கூறுகையில், “நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரணத்தை, குடும்ப ஓய்வூதியத்தை, பணிக்கொடையை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெற்றுத்தருவார்கள். அவர்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கவும் உதவுவார்கள். அதே நேரத்தில் நேரடியாக நிதி உதவி எதையும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
சத்தீஷ்கார் மாநிலம், சுக்மாவில் கடந்த சில தினங்களுக்கு முன் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையினர் 25 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இப்படி பாதுகாப்பு படையினர் நாட்டுக்காக உயிர் இழக்கிறபோது, அவர்களது குடும்பங்களை வழிநடத்துவதற்கு யாரும் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.
இனி நாட்டுக்காக உயிர் இழக்கிற பாதுகாப்பு படையினரின் குடும்பங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தத்து எடுத்து உதவிக்கரம் நீட்டுவார்கள்.
மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல்களில் ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் பலியாகிறபோது அவர்களது குடும்பங்களை தத்து எடுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அந்தந்த பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்து தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்க கவுரவ செயலாளர் சஞ்சய் பூஸ்ரெட்டி கூறுகையில், “நாட்டுக்காக உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிவாரணத்தை, குடும்ப ஓய்வூதியத்தை, பணிக்கொடையை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பெற்றுத்தருவார்கள். அவர்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கவும் உதவுவார்கள். அதே நேரத்தில் நேரடியாக நிதி உதவி எதையும் செய்ய மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X