என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கம்
Byமாலை மலர்29 April 2017 4:36 PM GMT (Updated: 29 April 2017 4:36 PM GMT)
கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து திக்விஜய் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
கோவா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும், சிறிய கட்சிகளின் ஆதரவை பெற முடியாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். பா.ஜ.க. குதிரைபேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியமைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மாநில மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததற்காக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் வலியுறுத்தினார். மேலும், கோவா பார்வர்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்காதது தங்கள் தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்புகளில் இருந்து திக் விஜய் சிங் இன்று நீக்கப்பட்டுள்ளார். கோவா மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செல்லக்குமார், மாநில செயலாளராக அமித் தேஷ்முக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்திற்கான பொதுச்செயலாளராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக, மாணிக்கம் தாகூர், பி.சி.விஷ்ணுநாத், மது யாஷ்கி கவுட், டாக்டர் சேக் செயில்ஜனாத் ஆகிய 4 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றிபெறும், சிறிய கட்சிகளின் ஆதரவை பெற முடியாததால் ஆட்சியமைக்க முடியவில்லை. பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக மனோகர் பாரிக்கர் பதவியேற்றார். பா.ஜ.க. குதிரைபேரத்தில் ஈடுபட்டு எம்.எல்.ஏ.க்களை வாங்கி ஆட்சியமைத்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மாநில மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததற்காக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் வலியுறுத்தினார். மேலும், கோவா பார்வர்டு கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்காதது தங்கள் தவறு என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவா மற்றும் கர்நாடக மாநிலத்திற்கான காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்புகளில் இருந்து திக் விஜய் சிங் இன்று நீக்கப்பட்டுள்ளார். கோவா மாநிலத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக செல்லக்குமார், மாநில செயலாளராக அமித் தேஷ்முக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்திற்கான பொதுச்செயலாளராக கே.சி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக, மாணிக்கம் தாகூர், பி.சி.விஷ்ணுநாத், மது யாஷ்கி கவுட், டாக்டர் சேக் செயில்ஜனாத் ஆகிய 4 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X