search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நக்சலைட்டு தாக்குதல் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.40 லட்சம் பரிசு: சுக்மா போலீஸ் அறிவிப்பு
    X

    நக்சலைட்டு தாக்குதல் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.40 லட்சம் பரிசு: சுக்மா போலீஸ் அறிவிப்பு

    சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட்ட சம்பவம் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சுக்மா போலீஸ் அறிவித்துள்ளது.
    புவனேஸ்வர்:

    சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) அங்கு முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர்.

    சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது படை பிரிவை சேர்ந்த 99 பேர் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது நக்சலைட்டுகள் நடத்திய அதிரடி தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் தமிழர்கள். நக்சலைட்டுகள் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் மிகவும் கொடூரமானது. இதனால் நாடே மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளது.


    இந்நிலையில், சி.ஆர்.பி.எப். வீரர்கள் 25 பேர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்ட்ட சம்பவம் தொடர்பாக தகவல் கொடுத்தால் ரூ.40 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சுக்மா போலீஸ் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக சுக்மா போலீசார் போஸ்டர்களை பல்வேறு இடங்களில் ஒட்டியுள்ளனர். தேடுதல் பணியை போலீசார் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளனர்.
    Next Story
    ×