search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
    X

    ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை

    வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    புதுடெல்லி:

    ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே, வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு செயல்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளிப்பது வழக்கம். இந்த நிலை காலப்போக்கில் இலவச அறிவிப்புகளை சார்ந்த ஒன்றாக மாறிவிட்டது.

    அதேசமயம், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும் அதிகரித்து விட்டது. இதனை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

    இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சமீப காலமாக தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் வருவதால், சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்படும் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கலாம் என தற்போது சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×