search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி
    X

    லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் தங்களுடைய உறவினர் இல்லத்திற்கு சென்று விட்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    நீமுச் மாவட்டதிலுள்ள கேஷ்புரா என்ற இடத்தின் அருகே வரும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவிலிருந்த தடுப்பு மீது திடீரென மோதியது.

    மோதிய வேவகத்தில் மீண்டும் எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மற்றொரு முறை மோதியது. இந்த கோர விபத்தில் காரிலிருந்த 6 பேரும் பலியாகினர். விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் இருந்ததே விபத்துக்கு காரணம் என போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×