search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரளாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு
    X

    கேரளாவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

    கேரளாவில் குட்டநாடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் பாபு என்பவருக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபு, (வயது 54). இவர், குட்டநாடு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உண்டு. சமீபத்தில் இவர் வாங்கிய கேரள அரசு லாட்டரியான ஸ்ரீசக்தி லாட்டரியில் முதல் பரிசான ரூ.1 கோடி பாபுவுக்கு கிடைத்துள்ளது.

    இதனால் மகிழ்ச்சியில் உள்ள பாபு கூறும்போது, ஓய்வு பெற சில ஆண்டுகளே உள்ள நிலையில் எனக்கு கிடைத்துள்ள லாட்டரி பரிசு எனது சிரம நிலையில் இருந்து மீள உதவும். எனது மகன்களுக்கு சொந்த வீடு கட்டி கொடுப்பேன். ஏழைகளுக்கும் உதவுவேன் என்றார்.
    Next Story
    ×