search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று வீரர்கள் பலி
    X

    ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - மூன்று வீரர்கள் பலி

    காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலியாகினர். ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே ராணுவ வீரர்கள் முகாம் அமைத்து பாதுகாப்பு மற்றும் சாலைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4 மணியளவில் முகாமுக்குள் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த ராணுவ வீரர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

    தீவிரவாதிகள் நிகழ்த்திய இந்த திடீர் தாக்குதலில் கேப்டன் உள்ளிட்ட மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயங்களுடன் அருகிலுள்ள ராணுவ மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.



    ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் இன்று அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிகாலை நேர இருட்டை பயன்படுத்தி முகாமுக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், அப்பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×