என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பசு பாதுகாப்பு கும்பலால் முதியவர் கொல்லப்பட்ட விவகாரம்: ராஜஸ்தான் சட்டசபையில் கடும் அமளி
Byமாலை மலர்24 April 2017 11:33 AM GMT (Updated: 24 April 2017 11:34 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அம்மாநில சட்டசபையில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சந்தையில் பசுக்களை வாங்கி வாகனத்தில் ஏற்றி வந்த அரியான மாநிலத்தை சேர்ந்த பெக்லு கான் என்ற முதியவர் பசு பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மேலும், உரிய ஆவணங்களை காட்டியும் தங்களை தாக்கியதாக அவருடன் வந்தவர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. இன்று அவை கூடியதுமே இவ்விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் கட்சியினர் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இது தொடர்பாக பதிலளித்து பேசிய அம்மாநில உள்துறை மந்திரி ,” இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், எனவே, இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்” எனக் கூறினார்.
தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் துணை சபாநாயகர் அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கூடிய அவை அமளியின்றி தொடர்ந்து நடைபெற்றது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் சந்தையில் பசுக்களை வாங்கி வாகனத்தில் ஏற்றி வந்த அரியான மாநிலத்தை சேர்ந்த பெக்லு கான் என்ற முதியவர் பசு பாதுகாப்பு கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
மேலும், உரிய ஆவணங்களை காட்டியும் தங்களை தாக்கியதாக அவருடன் வந்தவர்கள் தெரிவித்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் ராஜஸ்தான் மாநில சட்டசபையிலும் எதிரொலித்தது. இன்று அவை கூடியதுமே இவ்விவகாரத்தை கையிலெடுத்த காங்கிரஸ் கட்சியினர் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
இது தொடர்பாக பதிலளித்து பேசிய அம்மாநில உள்துறை மந்திரி ,” இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர், எனவே, இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கைவிட வேண்டும்” எனக் கூறினார்.
தொடர்ந்து அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் துணை சபாநாயகர் அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் கூடிய அவை அமளியின்றி தொடர்ந்து நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X