search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேசத்தில் கார் மீது ரெயில் மோதி 5 பேர் பலி
    X

    உத்தரபிரதேசத்தில் கார் மீது ரெயில் மோதி 5 பேர் பலி

    உத்தரபிரதேசத்தில் கார் மீது ரெயில் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
    படோகி:

    உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா நகருக்கு விபுதி எக்ஸ்பிரஸ் சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை அந்த ரெயில் மாதோசிங் மற்றும் அகிமான்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, அங்கிருந்த ஆளில்லாத ரெயில்வே கேட்டை கடந்து செல்வதற்காக ஒரு கார் வேகமாக வந்தது.

    அப்போது அந்த கார் மீது ரெயில் பயங்கரமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
    Next Story
    ×