என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தரகாண்டில் வன்முறை: மதுபாட்டில்களை உடைத்து சூறையாடிய பெண்கள்
Byமாலை மலர்8 April 2017 11:14 AM GMT (Updated: 8 April 2017 11:14 AM GMT)
உத்தரகாண்டில் மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த பெண்கள் மதுபாட்டில்களை உடைத்து சூறையாடினார்கள்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அங்கிருந்து மதுக்கடைகள் 500 மீட்டர் தூரத்தில் ஊருக்குள் மாற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகளும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமோலி மாவட்டம் கோபேஸ்வர் என்ற இடத்தில் மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினர் . அப்போது அங்கு மூடப்பட்டு இருந்த மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பெண்கள் அடித்து உடைத்தும் தரையில் வீசியும் சூறையாடினார்கள்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி மொத்தம் 50 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களும் நாசமானது.
தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி பிரியதர்ஷினி கூறுகையில், போலீசைவிட போராட்டம் நடத்திய பெண்கள் அதிக அளவில் இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.
இதே போல் சம்பா மாவட்டத்திலும் பல இடங்களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டன. தலைநகர் டேராடூனில் மதுக்கடைகளை எதிர்த்து பெண்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகளை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மூடப்பட்டன. அங்கிருந்து மதுக்கடைகள் 500 மீட்டர் தூரத்தில் ஊருக்குள் மாற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகளும், பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமோலி மாவட்டம் கோபேஸ்வர் என்ற இடத்தில் மதுக்கடையை எதிர்த்து பெண்கள் போராட்டம் நடத்தினர் . அப்போது அங்கு மூடப்பட்டு இருந்த மதுக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கிருந்த அட்டைப் பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பெண்கள் அடித்து உடைத்தும் தரையில் வீசியும் சூறையாடினார்கள்.
போலீஸ் பாதுகாப்பையும் மீறி மொத்தம் 50 பெட்டிகளில் இருந்த மதுபாட்டில்களும் நாசமானது.
தகவல் கிடைத்ததும் கூடுதல் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர். அதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது. இது பற்றி போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி பிரியதர்ஷினி கூறுகையில், போலீசைவிட போராட்டம் நடத்திய பெண்கள் அதிக அளவில் இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.
இதே போல் சம்பா மாவட்டத்திலும் பல இடங்களில் மதுக்கடைகள் சூறையாடப்பட்டன. தலைநகர் டேராடூனில் மதுக்கடைகளை எதிர்த்து பெண்கள் ஊர்வலம் நடத்தினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X