search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுத்தை தாக்கி 5 வயது சிறுமி பலி: நாசிக்கில் பரிதாபம்
    X

    சிறுத்தை தாக்கி 5 வயது சிறுமி பலி: நாசிக்கில் பரிதாபம்

    நாசிக் அருகே சிறுத்தை தாக்கியதில் 5 வயது பெண் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் நிபாட் தாலுகா பகுதியை சேர்ந்தவர் அசோக் ஹேண்ட்ஜ். இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக பணி புரிகிறார்.

    நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது 5 வயது மகள் கூடியைக் காணவில்லை என அசோக் தேடியுள்ளார். ஆனால் எங்கு தேடியும் தனது மகளை அசோக்கால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனினும் தொடர்ந்து மனம் தளராமல் மகளைத் தேடிய அவர் வீட்டிலிருந்து சுமார் 900 அடி தொலைவில் தனது மகளைப் பிணமாகக் கண்டெடுத்தார்.

    கூடி விளையாடிக் கொண்டிருந்த இடத்தின் அருகே மறைந்திருந்த சிறுத்தை சமயம் பார்த்து கூடியின் மேல் தாவி அவளை இழுத்து சென்று கொன்றதாக, அப்பகுதி போலீசார் தெரிவித்தனர்.

    5 வயது சிறுமியை சிறுத்தை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×