என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலாவை வேறு சிறைக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
Byமாலை மலர்3 April 2017 7:11 PM GMT (Updated: 3 April 2017 7:11 PM GMT)
சசிகலாவை துமகூருவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றக்கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு:
சசிகலாவை துமகூருவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றக்கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்ததோடு அவர்களை விடுவித்த கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 4 அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சிறையில் உள்ள தண்டனை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திப்பது சட்டப்படி தவறு என்றும், இதை தடுக்க சசிகலாவை துமகூருவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, “இத்தகைய வழக்குகளில் கோர்ட்டு தலையிடாது. இதுபோன்ற முடிவுகளை அரசே எடுக்க வேண்டும்” என்று கூறி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சசிகலாவை துமகூருவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்றக்கோரி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு கர்நாடக ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தனிக்கோர்ட்டு விதித்த தண்டனையை உறுதி செய்ததோடு அவர்களை விடுவித்த கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்தது.
இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 4 அமைச்சர்கள் நேரில் சந்தித்து பேசினர்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் சிறையில் உள்ள தண்டனை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திப்பது சட்டப்படி தவறு என்றும், இதை தடுக்க சசிகலாவை துமகூருவில் உள்ள பெண்கள் சிறைக்கு மாற்ற உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனு ஐகோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.முகர்ஜி, “இத்தகைய வழக்குகளில் கோர்ட்டு தலையிடாது. இதுபோன்ற முடிவுகளை அரசே எடுக்க வேண்டும்” என்று கூறி டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X