என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிறந்து 6 மணி நேரமே ஆன பெண் குழந்தை உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூரம்
Byமாலை மலர்2 April 2017 7:11 PM GMT (Updated: 2 April 2017 7:11 PM GMT)
ஒடிசா மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக பிறந்து 6 மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புவனேஷ்வர்:
ஒடிசா மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக பிறந்து 6 மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று மணல் பாங்கான பகுதியில் குழந்தை ஒன்றின் கால் வெளியே தெரிவதை பார்த்த ஒரு சிறுமி அக்கம்பக்கத்தில் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மணலை அப்புறப்படுத்தி பார்த்த போது பெண் குழந்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் துடித்துள்ளது.
உடனடியாக அந்த கிராமத்தினர் குழந்தையை மீட்டு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்து 6 மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் கடும் வறுமை நிலவியதால் பெண் குழந்தையை வளர்க்க சிரமம் எனக் கருதி, அக்குழந்தையின் தந்தை இத்தகைய கொடூர செயலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தெரிவித்துள்ள மருத்துவமனை ஊழியர்கள், அக்குழந்தைக்கு தாரித்ரி என பெயரிட்டுள்ளனர். அப்பெயருக்கு பூமி என்று சமஸ்கிருத மொழியில் அர்த்தம் என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக பிறந்து 6 மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், நேற்று மணல் பாங்கான பகுதியில் குழந்தை ஒன்றின் கால் வெளியே தெரிவதை பார்த்த ஒரு சிறுமி அக்கம்பக்கத்தில் தகவல் கூறியுள்ளார். இதையடுத்து அந்த மணலை அப்புறப்படுத்தி பார்த்த போது பெண் குழந்தை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் துடித்துள்ளது.
உடனடியாக அந்த கிராமத்தினர் குழந்தையை மீட்டு மருத்துமனையில் சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தை பிறந்து 6 மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். குடும்பத்தில் கடும் வறுமை நிலவியதால் பெண் குழந்தையை வளர்க்க சிரமம் எனக் கருதி, அக்குழந்தையின் தந்தை இத்தகைய கொடூர செயலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தை ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக தெரிவித்துள்ள மருத்துவமனை ஊழியர்கள், அக்குழந்தைக்கு தாரித்ரி என பெயரிட்டுள்ளனர். அப்பெயருக்கு பூமி என்று சமஸ்கிருத மொழியில் அர்த்தம் என அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X