என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக் கூடங்களுக்கு `சீல்': மாநில அரசு அதிரடி
Byமாலை மலர்1 April 2017 10:47 AM GMT (Updated: 1 April 2017 10:47 AM GMT)
பீகார் மாநிலம் ரோத்தஸ் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக் கூடங்களுக்கு, மாநில அரசு `சீல்' வைத்துள்ளது.
பாட்னா:
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி வரிசையாக இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பீகார் மாநிலம் ரோத்தஸ் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக்கூடங்களுக்கு காவல்துறை இன்று `சீல்' வைத்துள்ளது.
சமீபத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டது.
எனினும் நீதிமன்ற உத்தரவு இதற்குக் காரணமில்லை என்றும், 2012-ம் ஆண்டிலேயே அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டதாகவும், பீகார் கால்நடைத்துறை அமைச்சர் அவாதேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுக்கள் அமைத்து அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களுக்கு `சீல்' வைக்கும்படி கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.இவ்வாறு `சீல்' வைக்கப்படும் இறைச்சிக்கூடங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின், மீண்டும் செயல்படத் துவங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தர பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவுப்படி வரிசையாக இறைச்சிக்கூடங்கள் மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பீகார் மாநிலம் ரோத்தஸ் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 8 இறைச்சிக்கூடங்களுக்கு காவல்துறை இன்று `சீல்' வைத்துள்ளது.
சமீபத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களை 6 மாதத்திற்குள் மூட வேண்டும் என உத்தரவிட்டது.
எனினும் நீதிமன்ற உத்தரவு இதற்குக் காரணமில்லை என்றும், 2012-ம் ஆண்டிலேயே அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டதாகவும், பீகார் கால்நடைத்துறை அமைச்சர் அவாதேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான குழுக்கள் அமைத்து அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக்கூடங்களுக்கு `சீல்' வைக்கும்படி கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.இவ்வாறு `சீல்' வைக்கப்படும் இறைச்சிக்கூடங்கள் குறிப்பிட்ட காலத்துக்குப்பின், மீண்டும் செயல்படத் துவங்குவதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X